சசிகலாவை சந்தித்தது ஏன்? -நடிகர் பிரபு விளக்கம்

 

சசிகலாவை சந்தித்தது ஏன்? -நடிகர் பிரபு விளக்கம்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸில் இருந்தவர். பின்னர் புதிய கட்சி தொடங்கி தேர்தலில் நின்று தோல்வியடைந்தார். இந்த சூழலில் சிவாஜியின் மூத்த மகனும் நடிகருமான ராம்குமார் அண்மையில் பாஜகவில் இணைந்தார்.

சசிகலாவை சந்தித்தது ஏன்? -நடிகர் பிரபு விளக்கம்

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகி வந்த சசிகலாவை, நேற்று நடிகர் பிரபு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு முன்னதாக சரத்குமார், இயக்குநர்கள் லிங்குசாமி, பாரதிராஜா, அமீர் ஆகியோரும் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, “சுகாதரன் இன்னும் 7 மாதங்கள் சிறையில் இருப்பார். பாஜகவில் இணைந்துள்ள தனது அண்ணன் ராம்குமாருக்கு வாழ்த்துக்கள். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. சசிகலாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்” என்று தெரிவித்தார்.