நடிகர் கார்த்திக் ஐசியுவில் அனுமதி – ஷாக்கில் குஷ்பு!

 

நடிகர் கார்த்திக் ஐசியுவில் அனுமதி – ஷாக்கில் குஷ்பு!

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திவருகிறார். இவர் அவ்வப்போது கௌரவ வேடங்களிலும் படங்களில் நடித்துவருகிறார். கார்த்திக் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை. அதிமுக கூட்டணிக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்துவருகிறார்.

நடிகர் கார்த்திக் ஐசியுவில் அனுமதி – ஷாக்கில் குஷ்பு!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதர்களின் உரிமைகளைக் காக்கும் பாஜகவில் குஷ்பு சேர்ந்திருப்பதால் அவருக்கு ஆதரவாக ஆயிரம் விளக்கில் வாக்கு சேகரிப்பேன் என்று கூறியிருந்தார். பிரச்சாரத்துக்கு பாஜககாரர்கள் கூட ஒத்துழைக்காத நிலையில் திண்டாடிக் கொண்டிருந்த குஷ்புவுக்கு கார்த்திக்கின் வார்த்தைகள் நம்பிக்கை கொடுத்தார். இச்சூழலில் நேற்றிரவு அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார் கார்த்திக்.

நடிகர் கார்த்திக் ஐசியுவில் அனுமதி – ஷாக்கில் குஷ்பு!


அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவசர ஊர்தியின் உதவியுடன் சென்னை அடையாற்றில் உள்ள மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கார்த்திக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று முடிவாகியுள்ளது. இருப்பினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. இதனால் சில நாட்களுக்கு அவர் பிரச்சாரம் செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தனக்காக குரல் கொடுத்த கார்த்திக்கும் இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் குஷ்பு உள்ளாராம்.