பிரச்சாரத்தால் வந்த விபரீதம்:நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

 

பிரச்சாரத்தால் வந்த விபரீதம்:நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திவருகிறார். அதுமட்டுமின்றி படங்களில் அவ்வப்போது கௌரவ வேடங்களிலும் நடித்துவருகிறார். கார்த்திக் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் அதிமுக கூட்டணிக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக அறிவித்துவிட்டு அதன்பின் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிரச்சாரத்தால் வந்த விபரீதம்:நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

அதன்பின் உடல்நலம் தேறிவந்த நடிகர் கார்த்திக், சொன்ன வார்த்தையை காப்பாற்றும் விதமாக சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி கந்தசாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் கார்த்திக் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் விபரீதம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.