நடிகர் சித்ரா தற்கொலை : பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமிடம் விசாரணை!

 

நடிகர் சித்ரா தற்கொலை : பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமிடம் விசாரணை!

நடிகை சித்ரா தற்கொலை குறித்து சக நடிகர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சித்ரா தற்கொலை : பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமிடம் விசாரணை!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது. மிகவும் தைரியமான பெண்ணாக வெளி உலகிற்கு தோன்றிய சித்ரா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது. சித்ரா தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் ஹேமந்த் மற்றும் அவரது தாயார் விஜயா அளித்த மனஅழுத்தமே காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சித்ரா தற்கொலை : பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமிடம் விசாரணை!

இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக நடிகர்கள் வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார் , சரவணன் விக்ரம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் ஹேமந்த் ரவி குடித்து விட்டு தகராறு செய்தாரா? சித்ரா தான் மன உளைச்சலில் இருந்தது குறித்து ஏதாவது கூறினாரா என்பது போன்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் சித்ரா தற்கொலை : பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமிடம் விசாரணை!

அதேசமயம் மனைவி சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் ஹேமந்த் தெரிவித்த வாக்குமூலத்தையும், அவரது தந்தை அளித்த புகாரிலும் பல முரண்பாடுகள் உள்ளதால் தொடர்ந்து அவரிடம் நான்காவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.