கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன்!

 

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன்!

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இத்தகவலை அவர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அமிதாப் மகன் அபிஷேக் பச்சனுக்கும் நடிகையும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்க்கும் இவர்களது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன்!

முன்னதாக சிகிச்சைக்கு பின் ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதேபோல் பாலிவுட் ஜாம்பவானும் அபிஷேக்கின் தந்தையுமான அமிதாப் பச்சனும் கடந்த வாரம் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார். கொரோனா தொற்றிற்காக அபிஷேக் பச்சன் மும்பை தனியார் மருத்துவமனையில் 29 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் என வந்ததால் அவர், வீடு திரும்பினார்.