எஸ்வி சேகர் போல ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக அமைச்சர் எச்சரிக்கை !

 

எஸ்வி சேகர் போல ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக அமைச்சர் எச்சரிக்கை !

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார். ஆனால் எஸ்வி சேகரை போலவே திமுக தலைவர் ஸ்டாலின் தேசியக்கொடியை அவமதித்ததாகவும், கையில் கிளவுஸ் போட்டப்படியும், வணக்கம் செலுத்தாமலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார் என அதிமுக செய்தி தொடர்பாளர் ஆர்எம் பாபு முருகவேல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

எஸ்வி சேகர் போல ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக அமைச்சர் எச்சரிக்கை !

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமைச்சர் பாண்டியராஜன், “தேசியக் கொடி ஏற்றுவது குறித்து ஸ்டாலினுக்கு புரிதல் இல்லை. இதுவரை நான் அவர் தேசியக்கொடி ஏற்றி பார்த்ததில்லை.

எஸ்வி சேகர் போல ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக அமைச்சர் எச்சரிக்கை !

புரிதல் இல்லாமல் ஸ்டாலின் தவறு செய்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் எஸ்வி சேகர் போல ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “உதயநிதியின் பிள்ளையார் குறித்த சமூக வலைத்தள பதிவு போலிதனத்தின் உச்சம். போலித்தனமான கட்சியில் இருக்க வேண்டுமா என்பதை திமுக தொண்டர்கள் முடிவெடுக்க வேண்டும்” என்று விமர்சித்தார்.