“பதிவு செய்யாமல் முதியோர் இல்லங்கள் செயல்பட்டால் நடவடிக்கை”- திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை!

 

“பதிவு செய்யாமல் முதியோர் இல்லங்கள் செயல்பட்டால் நடவடிக்கை”- திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை!

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் பதிவு செய்யாமல் முதியோர் இல்லங்கள் செயல்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், திருச்சி மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவுசெய்து சான்று பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பதிவு செய்யாமல் இருப்போர் உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

“பதிவு செய்யாமல் முதியோர் இல்லங்கள் செயல்பட்டால் நடவடிக்கை”- திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை!

பதிவு செய்யாமல் முதியோர் இல்லங்கள் செயல்படுத்த அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ள ஆட்சியர் சிவராசு, ஜுலை 19ஆம் தேதிக்கு மேல் பதிவுசெய்யாமல் முதியோர் இல்லங்கள் நடத்துவது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.