“துர்கா பூஜை பார்க்கலாம்ணு தூக்கிட்டு போய்ட்டானுங்களே” -நவராத்திரியின் நடுராத்திரியில் நடந்த பலாத்காரம்.

 

“துர்கா பூஜை பார்க்கலாம்ணு தூக்கிட்டு போய்ட்டானுங்களே” -நவராத்திரியின் நடுராத்திரியில் நடந்த பலாத்காரம்.


துர்க்கா பூஜையை காமிக்கிறோம்னு மூன்று வாலிபர்கள் தங்களின் தோழிகளை கூட்டி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது .

“துர்கா பூஜை பார்க்கலாம்ணு தூக்கிட்டு போய்ட்டானுங்களே” -நவராத்திரியின் நடுராத்திரியில் நடந்த பலாத்காரம்.

அக்டோபர் 22 ம் தேதி அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் நவராத்திரி விழாவுக்காக கோலாகலமாக பந்தல் போடப்பட்டிருந்தது .அப்போது அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் , மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அந்த துர்க்கா பூஜையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள் .
அந்த நேரத்தில் அங்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த ,மூன்று பள்ளி சிறுவர்கள் அந்த பூஜையை பார்க்கலாம் என்று கூரி அந்த பகுதியை சேர்ந்த மூன்று மாணவிகளை தங்களின் காரில் கூட்டி போனார்கள் .அவர்களை நம்பி வந்த மூன்று மாணவிகளை பூஜை நடக்கும் இடத்திற்கு கூட்டி செல்வது போல கூட்டி சென்று விட்டு பாதியிலேயே வேறு ஒரு இடத்திற்கு கூடி சென்றார்கள் .அது அவர்கள் படிக்கும் பள்ளி மைதானம் .அங்கு வைத்து மூன்று சிறுவர்களும் அந்த மூன்று பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .பிறகு அவர்களை அங்கிருந்து கூட்டி வந்து அவர்களின் வீட்டில் இறக்கி விட்டு ஓடிவிட்டார்கள் .
இதனால் அந்த மாணவிகள் தங்களின் பெற்றோரோடு சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த மூன்று சிறுவர்கள் மீது புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று மாணவர்களையும் கைது செய்தார்கள்
அவர்களிடம் இருந்து நான்கு சக்கர வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் செல்போன்களில் இந்த சம்பவத்தின் வீடியோவை உருவாக்கியதாக அந்த பெண்கள் கூறியதால் அது பற்றியும் போலீசார் விசாரிக்கிறார்கள் .

“துர்கா பூஜை பார்க்கலாம்ணு தூக்கிட்டு போய்ட்டானுங்களே” -நவராத்திரியின் நடுராத்திரியில் நடந்த பலாத்காரம்.