பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு புகார்! விசாரித்து அறிக்கை தர உத்தரவு!

 

பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு புகார்! விசாரித்து அறிக்கை தர உத்தரவு!

சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது எழுந்த சொத்துகுவிப்பு புகாரை விசாரித்து அறிக்கை உத்தரவிட்டுள்ளது மத்திய அரசின் பணியாளர் நலத்துறை.

கொரோனா நடவடிக்கையில் பரபரப்பாக இருந்த பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டார். இதன்பின்னர், வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கூறி, அந்த சொத்துக்களை பட்டியலிட்டு மத்திய அரசின் பணியாளர் நலத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார் சமூக ஆர்வலர் செந்தில். இந்த புகாரின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமைச்செயலாளர் சண்முகத்திற்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

பீலா ராஜேஷ் மீதான சொத்துகுவிப்பு புகாரும், அதை விசாரித்து அறிக்கை கேட்டிருக்கும் உத்தரவும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.