டைடல் பார்க்கில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

 

டைடல் பார்க்கில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

டைடல் பார்க் சென்னையின் தரமணி பகுதியில் அமைந்த தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் ஆகும். ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள இக்கட்டிடம் 2000இல் திறக்கப்பட்டது. டைடல் பார்க், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்களில் ஒன்றாகும். இக்கட்டிடம், 119,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

TIDEL Park - Wikipedia

தரமணி டைடல் பார்க்கில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே பழுதாகியிருக்கும் கட்டடங்களை சரி செய்யும் பணியின் போது ஆறுமுகம் என்பவர் முதல் தளத்தில் நின்றுக் கொண்டு சுவரை இடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது சுவர் சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.