மின்னல் வேகத்தில் சென்ற கார்… பறிபோன இளைஞர்களின் உயிர்!- கோவை பதறவைத்த விபத்து

 

மின்னல் வேகத்தில் சென்ற கார்… பறிபோன இளைஞர்களின் உயிர்!- கோவை பதறவைத்த விபத்து

கோயம்பத்தூர் அருகே இன்று அதிகாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கோயம்பத்தூர் மாவட்டம் கணுவாய் பகுதியை அடுத்த காளையணூர் பகுதியில் இன்று அதிகாலை வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில் காரில் இருந்த இந்தரேஷ், மோகன்ஹரி, கார்த்திராஜ், மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த பிரஜேஷ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “இன்று அதிகாலையில் காளையணூர் பகுதியில் அதிவேகத்தில் கார் ஒன்று வந்துள்ளது. கார் மின்னல் வேகத்தில் சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததோடு, சாலையோர மரத்தில் மோதியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இறந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதால் மது குடித்து இருந்தார்களா என்து விசாரிக்கிறோம். காரில் இவர்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

அதிகாலையில் நடந்த விபத்தில் 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் கோவை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.