ஹால்டிக்கெட் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

 

ஹால்டிக்கெட் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

நெல்லை மாவட்டத்தில் 10 வகுப்பு தேர்வுக்கு ஹால்டிக்கெட் வாங்கி விட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது எதிரே வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த நால்வரில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அடுத்த சிறுமளஞ்சி அருகே உள்ள சிங்கநேரி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (45) விவசாயி. இவரது சகோதரி மகள் காவியா பெருமளஞ்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று ஹால் டிக்கெட் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டதையடுத்து அதனை பெறுவதற்காக ஒரே இருசக்கரவாகனத்தில் கண்ணன் , அவரது மகன் சபரீசன், அவரது சகோதரர் மகள் மனீஷா, மற்றும் காவியா ஆகிய 4 பேர் சென்றுள்லனர். பெருமளஞ்சியில் உள்ள பள்ளிக்கு சென்று ஹால் டிக்கெட் பெற்றுகொண்டு வீட்டுக்கு திரும்பி செல்ல ஏர்வாடி அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக இருசக்கரவாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கரவாகனத்தில் வந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.

ஹால்டிக்கெட் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக நாகர்கோவில் அனுப்பி வைத்தனர் . இதில் மருத்துவமனை செல்லும் வழியில் கண்ணன் மற்றும், மனீஷா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இவர்களின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த கண்ணனின் மகன் சபரீசன் மற்றும் சகோதரி மகள் காவியா ஆகிய இருவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கார் ஓட்டுனர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.