தக்கலையில் நிகழ்ந்த சாலை விபத்து; ஒருவர் பலி

 

தக்கலையில் நிகழ்ந்த சாலை விபத்து; ஒருவர் பலி

தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரபின் (22). இவர் தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை கொடுப்பதற்காக திக்கணங்கோட்டிலிருந்து குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் அவரது உறவினர் வினு வேறொரு இருசக்கர வாகனத்தில் பிரபினை குளச்சலில் இருந்து திருப்பி அழைத்து வருவதற்காக சென்று கொண்டிருந்தார். அவர்கள் நெல்லிமூடு என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பிரபின் தூக்கி வீசப்பட்டார். இதில் இருவரும் படுகாயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இருசக்கர வாகனத்தில் வந்து மோதிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் சென்னை திருவொற்றியூர் அருகே காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.