“இதை ஒரு பாட்டில் குடி ,வலியால் துடி” -ஒரு கணவன் தன் மனைவியை எப்படி கொடுமைப்படுத்தினார் பாருங்க

 

“இதை ஒரு பாட்டில் குடி ,வலியால் துடி” -ஒரு கணவன் தன் மனைவியை எப்படி கொடுமைப்படுத்தினார் பாருங்க

ஒரு போலீஸ் கணவன் தன்னுடைய மனைவியை ஆசிட் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியதாக அவர் மனைவி புகார் கூறியுள்ளார்.

“இதை ஒரு பாட்டில் குடி ,வலியால் துடி” -ஒரு கணவன் தன் மனைவியை எப்படி கொடுமைப்படுத்தினார் பாருங்க


குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் அசோக் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் வசித்து வந்தார் .அவர் ஜெயஸ்ரீ என்ற மனைவியை 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .அப்போது அந்த பெண்ணின் தந்தை அவருக்கு ஒரு மோட்டார் பைக் வரதட்சனையாக கொடுத்தார் .அந்த வண்டி வந்ததிலிருந்து அடிக்கடி ரிப்பேர் ஆகி கொண்டிருந்தது .அதனால் அந்த கான்ஸ்டபிள் அந்த மனைவியிடம் உங்க அப்பா பழைய வண்டியை வரதட்சணையாக கொடுத்து விட்டார் என்று கூறி திட்டி சண்டை போட்டுக்கொண்டிருந்தார் .
இதனால் அந்த மனைவி ஜெயஸ்ரீ மிகவும் மன வேதனையடைந்தார் .மேலும் கடந்த வரம் உடை அணியும் விஷயத்தில் அவருக்கும் அவரின் கணவரின் மனைவிக்கும் இடையே சண்டை வந்துள்ளது .அப்போது கோபப்பட்ட அந்த கணவர் அவரின் மனைவியை ஆசிடை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தினார் .பின்னர் ஆசிடை குடித்து வலியில் துடித்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லாமல் அவர் துடிப்பதை வேடிக்கை பார்த்து ரசித்துள்ளார் .மேலும் அவரை கடுமையாக தாக்கியுள்ளார் .
பின்னர் அக்கம் பக்கத்தினர் அந்த ஜெயஸ்ரீயை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் ,.அதன் பின்னர் அனைவரும் சேர்ந்து கொண்டு அந்த கணவர் மீது பொலிஸில் புகார் கூறினார்கள் .பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .

“இதை ஒரு பாட்டில் குடி ,வலியால் துடி” -ஒரு கணவன் தன் மனைவியை எப்படி கொடுமைப்படுத்தினார் பாருங்க
rep image