கழிப்பிடத்திற்கு சென்ற சிறுமியை கிண்டல் செய்து கையை பிடித்து இழுத்த இளைஞர் போக்சோவில் கைது!

 

கழிப்பிடத்திற்கு சென்ற சிறுமியை கிண்டல் செய்து கையை பிடித்து இழுத்த இளைஞர் போக்சோவில் கைது!

கழிப்பிடத்திற்கு சென்ற சிறுமியை கிண்டல் செய்து கையை பிடித்து இழுத்து, கண்ணத்தில் அறைந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை சிறுமி, கழிவறைக்கு சென்றபோது, பச்சையப்பன்(29) என்ற இளைஞர் சிறுமியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுமி அவர் மீது எச்சில் துப்பி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

கழிப்பிடத்திற்கு சென்ற சிறுமியை கிண்டல் செய்து கையை பிடித்து இழுத்த இளைஞர் போக்சோவில் கைது!

இதனால் ஆத்திரமடைந்த பச்சையப்பன் சிறுமியின் கையை பிடித்து இழுத்து கண்ணத்தில் ஓங்கி அறைந்ததுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் பச்சையப்பனை போக்சோ சட்டத்தின் கைது செய்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.