“பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு” – பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் கைது!

 

“பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு” – பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் கைது!

ஆத்தூர் அருகே மல்லியக்கரையில் கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்த தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு” – பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் கைது!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரையை சேர்ந்தவர் சரண்யா. இவர் கர்ப்பமாக உள்ள நிலையில் கருவில் இருப்பது பெண் குழந்தை என கண்டறிந்து சரண்யாக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் சரண்யா புகார் அளித்த நிலையில் , கருக்கலைப்பில் ஈடுப்பட்ட சரண்யாவின் தாய் பூங்கொடி, அலமேலு, சிவபிருந்தா, சின்ராசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் வைத்தே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் பூமணி, ஸ்கேன் செய்த புகழ் ஆகியோர் தலைமறைவான நிலையில் அவர்களுக்கு போலீஸ் வலைவீசியுள்ளனர்.

“பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு” – பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் கைது!

சட்ட விரோத கருக்கலைப்பு மற்றும் ஸ்கேன் மூலம் பாலினத்தை தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். சட்ட விரோத கருக்கலைப்பு தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில் பெண் சிசு என்பதால் கருச்சிதைப்பு அரங்கேறியிருப்பது கூடுதல் அதிர்ச்சியை அளிக்கிறது.