‘ஆவின் பற்றிய உண்மைகளைத் திரித்துச் சொல்கிறார் பொன்னுசாமி’ ஆவின் நிர்வாகம் பதில்!

 

‘ஆவின் பற்றிய உண்மைகளைத் திரித்துச் சொல்கிறார் பொன்னுசாமி’ ஆவின் நிர்வாகம் பதில்!

தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவினில் முறைகேடு நடப்பதாகச் சொல்லி அவற்றைச் சரிசெய்ய முதலமைச்சர் அதிரடி பறக்கும் படை அமைக்க வேண்டும் என மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் தமிழ்நாடு பால் முகவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி. ஆவின் தொடர்பாக மேலும் பல குற்றசாட்டுகளையும் முன் வைத்திருந்தார். இந்நிலையில் ஆவின் நிர்வாகம் பொன்னுசாமியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆவின் பற்றிய உண்மைகளைத் திரித்து பொன்னுசாமி கூறுவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆவின் நிறுவனத்தின் சார்பில் 07.07.2020 அன்று மாண்புமிகு முதல்வர் அவர்களால் ஐந்து வகையான புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவையாவன, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்லேட் மற்றும் மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெட்டுப்போகாத சமன்படுத்தப்பட்ட பால் (பிளக்சி பேக்குகளில்) மற்றும் டீ மேட் என்ற புதிய வகை பால்.

‘ஆவின் பற்றிய உண்மைகளைத் திரித்துச் சொல்கிறார் பொன்னுசாமி’ ஆவின் நிர்வாகம் பதில்!

இதைத் தொடர்ந்து தமிழ் நாடு பால் முகவர் தொழிலாளர் நல சங்க தலைவர் பொன்னுசாமி இந்த ஐந்து பொருட்களும் ஏற்கனவே சந்தையில் உள்ளன என்றும் ஆவின் நிர்வாகம் இந்த பொருட்கள் புதியவை என்று மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது என்று தவறான அறிக்கையை ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இந்தச் செய்தி உண்மைக்கு புறம்பானது மற்றும் விஷமத்தனமானது.

ஆவின் நிறுவனம், இதுவரை அதிக பட்சமாக 6% கொழுப்புசத்து மற்றும் 9% இதர சத்தும் உள்ள பாலை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இப்போது ஆவின் டீ மேட் என்ற புதிய வகை பால் 6.5% மற்றும் 9% புரத சத்துகொண்டது. இந்த பால் வர்த்தகரீதியில் டீகடைகள், ஹோட்டல், சமையல் வல்லுநர்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லெஸ்ஸியை பொறுத்தவரை ஆவின் நிர்வாகம் ஏற்கனவே சாதாரண வகை லெஸ்ஸி மற்றும் ப்ரோ பையோடிக் என்ற இரு வகை லெஸ்ஸி விற்பனை செய்து வருகிறது. தற்போது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விரும்பி பருகும் வகையில் சாக்லேட் மற்றும் மாம்பழ சுவைகளில் புதிய இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஆவின் மோர் சாச்சேட் பேக்குகளில் மற்றும் 200ML பெட் ஜார்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் இஞ்சி, மஞ்சள், துளசி, சீரகம், பெருங்காயம், எலுமிச்சை, இந்துப்பு போன்ற மூலிகை பொருள்களை சேர்த்து இயற்கையான முறையில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ துறையின் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய வகை மோரை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ஆவின் பற்றிய உண்மைகளைத் திரித்துச் சொல்கிறார் பொன்னுசாமி’ ஆவின் நிர்வாகம் பதில்!

நீண்ட நாள் கெட்டுப்போகாத அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் ( 4.5% கொழுப்புசத்து மற்றும் 8.5% புரத சத்தும் கொண்டது) புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பால் குளிர்சாதன பெட்டியை தவிர்த்து அறை வெப்ப நிலையில் 90 நாட்கள்வரை கெட்டுப்போகாமல் இருக்கும் வகையில், பிளக்சி பேக்குகளில் ஆவின் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை.

மேற்கூறிய உண்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் பொன்னுசாமி  ஆவின் நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதனை ஆவின் நிர்வாகம் வன்மையாக கண்டிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து புதிய பொருட்களும் சந்தைக்கு புதியவை.

மேலும் டீ மேட் பால் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டினை பொன்னுசாமி கூறியள்ளார். இந்த பால் வணிக நோக்குடன் சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் அதிகம் பயனடையும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விற்பனை கமிஷன் ரூ. 5/- தனியார் நிறுவனம் போல தரப்படுகிறது. இது தனியார் நிறுவனங்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆவின் பற்றிய உண்மைகளைத் திரித்துச் சொல்கிறார் பொன்னுசாமி’ ஆவின் நிர்வாகம் பதில்!

இந்தப் புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் இதே போன்று புதிய பொருட்களை அறிமுகபடுத்த முன்வந்துள்ளன. தனியார் பாலைவிட சிறந்த முறையில் அதிக கொழுப்பு சத்து (6.5%) கொண்ட இந்த பால் டீ கடைகள் மற்றும் உணவகங்கள் அதிக கோப்பைகள் தயாரிக்கும் வகையில் அதிக கொழுப்பு மற்றும் புரதசத்து கொண்டது. ஆனால் இந்த உண்மைகள் பொன்னுசாமி அவர்களால் திரித்து கூறப்பட்டுள்ளது .

கோவிட்-19 இக்கட்டான சூழ்நிலையில், தனியார் துறையினர் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதலை தவிர்த்த நிலையில், தமிழக அரசின் பால்வளத்துறையின் மூலம் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதோடு தமிழகம் முழுவதும் சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் தங்குதடையின்றி பால் மற்றும் பால் உபபொருள்கள் பொதுமக்களுக்கு சரியான நேரத்திற்கு விற்பனை செய்து தமிழக மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

இதை பொறுக்க முடியாத சு.ஆ. பொன்னுசாமி போன்றோர் பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் தினமும் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு சுயவிளம்பரத்திற்காக, கிராமப்புற விவசாயிகள் மற்றும் நகர்ப்புற நுகர்வோர்களுக்கு லாப நோக்கமின்றி செயல் பட்டு வரும் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமான ஆவின் செயல்பாடுகளை குறை கூறுவதையே தொழிலாக கொண்டுள்ளார்.

தமிழக மக்களுக்காக ஆவின் இந்த இக்கட்டான கொரோனா தொற்று காலகட்டத்திலும் தமிழக அரசின் சீரிய வழிகாட்டுதல் மூலம் சிறப்பாக பணி செய்து வருவது அனைவரும் அறிந்த உண்மையாகும்.’ என்று தெரிவித்துள்ளது.