“உங்க கருத்தை என்கிட்ட திணிக்காதீங்க”..அர்ச்சனாவுடன் மோதும் ஆரி!

 

“உங்க கருத்தை என்கிட்ட திணிக்காதீங்க”..அர்ச்சனாவுடன் மோதும் ஆரி!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான 2ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் சண்டை, அழுகை, சிரிப்பு, கோபம் என பன்முகங்களை போட்டியாளர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இப்போது தான் அவர்கள் உண்மையிலேயே கேம் விளையாடுகிறார்களோ என்றும் கூட நினைக்கத் தோன்றியது. இவை எல்லாமே, விஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்து தான்.

“உங்க கருத்தை என்கிட்ட திணிக்காதீங்க”..அர்ச்சனாவுடன் மோதும் ஆரி!

போட்டியாளர்களை மக்கள் வெளியே எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அர்ச்சனா மறைமுக எடுத்துக் கூறியதில் இருந்து, ஹவுஸ் மேட்ஸ் எல்லாரும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இதுவரை ஏதும் பேசாமல் எல்லாவற்றுக்கும் தலை அசைத்துக் கொண்டிருந்த சில போட்டியாளர்கள் கூட, தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், ஆரி அர்ச்சனாவுடன் வாக்குவாதம் செய்வது போல புரோமோ வெளியாகியுள்ளது.

“உங்க கருத்தை என்கிட்ட திணிக்காதீங்க”..அர்ச்சனாவுடன் மோதும் ஆரி!

அந்த புரோமோவில், “ஆரியும் அனிதாவும் ஓய்வெடுக்கும் அறைக்குள் இருக்க அர்ச்சனா அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஆரி, நானே எல்லாருக்கும் சாப்பாடு கொடுக்கிறேன் என்று கூறுவது தப்பு. அதற்கு அர்ச்சனா, நீங்க ஆஜித்திடம் இவ்வளவு தான் சாப்பிடுவியா? என்று கேட்டீங்க. நாம யாரையும் அதிகமாக சாப்பிட சொல்லி வற்புறுத்தக் கூடாது என பதிலளிக்கிறார்.

“உங்க கருத்தை என்கிட்ட திணிக்காதீங்க”..அர்ச்சனாவுடன் மோதும் ஆரி!

உடனே ஆரி, உங்க கருத்த என்கிட்ட திணிக்காதீங்க. பிளேட் நானே கழுவிக்கிறேன் என்று எப்படி நீங்க சொல்விங்க? என்று கூறுவது போல புரோமோ முடிகிறது. கண்டன்ட் கிடைக்காததால் இதையெல்லாம் புரோமோவில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.