ஶ்ரீவைகுண்டத்தில் கால்வாயில் சடலமாக கிடந்த இளைஞர்… கொலையா? என போலீஸ் விசாரணை…

 

ஶ்ரீவைகுண்டத்தில் கால்வாயில் சடலமாக கிடந்த இளைஞர்… கொலையா? என போலீஸ் விசாரணை…

தூத்துக்குடி

ஶ்ரீவைகுண்டம் அருகே கால்வாயில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் சிவன் கோவில் பின் பகுதியில் உள்ள கால்வாயில் இன்று காலை ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில், சடலமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள், ஶ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

ஶ்ரீவைகுண்டத்தில் கால்வாயில் சடலமாக கிடந்த இளைஞர்… கொலையா? என போலீஸ் விசாரணை…

அதில், உயிரிழந்த நபர் சோளப்பண்ணை பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (25) என்பதும், அவர் கனரக வாகன ஓட்டுநராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு அதிகளவு ரத்தம் வெளியேறியதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ஶ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளைஞர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.