பஞ்சர்… தண்ணீர்… செல்போன் நம்பர்!- இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன திருமணமானவர் சிக்கினார்

 

பஞ்சர்… தண்ணீர்… செல்போன் நம்பர்!- இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன திருமணமானவர் சிக்கினார்

பஞ்சரான பைக்குடன் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு தண்ணீர் கொடுத்த இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கி எஸ்கேப் ஆகியுள்ளார் வாலிபர் ஒருவர். மதுரவாயலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த மதுரவாயலை சேர்ந்தவர் நிவேதா, 24 (பெயர் மாற்றம்). இவருக்கு நேற்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிவேதாவை பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, நிவேதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உங்கள் மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது என்றும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்தனர் பெற்றோர், மருத்துவர்கள் சொன்ன மாதிரி நிவேதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது குறித்து பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் மகிழ்ச்சி அடையாமல் அதிர்ச்சி அடைந்ததால் மருத்துவர்கள் குழப்பமடைந்தனர். அப்போதுதான், நிவேதாவுக்கு திருமணம் ஆகவில்லை என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, காவல்துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மதுரவாயல் காவல்துறையினர், மருத்துவனைக்கு சென்று நிவேதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில், புழலைச் சேர்ந்த லோகேஷ் (24)என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கி விட்டு, கைவிட்டு சென்றுவிட்டார்” என்ற கூறியுள்ளார். இதையடுத்து, லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்த மதுரவாயல் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் லோகேஷுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி இருக்கிறார். கடந்த ஆண்டு பணி நிமித்தமாக மதுரவாயல் வழியாக சென்று லோகேஷ் கொண்டிருந்தபோது அவருடைய இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகியுள்ளது. வெயிலின் உச்சத்தில் பஞ்சர் ஆன இருசக்கர வாகனத்துடன் நின்றவர், சாலை ஓரத்தில் இருந்த வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

அப்போது, நிவேதா தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துள்ளார். அழகாக இருந்த நிவேதா மீது காதல் வயப்பட்ட லோகேஷ், தனது போன் நம்பரை ஒரு துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த பெண் எப்படியும் அழைப்பார் என ஒரு வாரம் லோகேஷ் காத்திருந்துள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் விட்டதால், மீண்டும் அவர் வீட்டுக்கு சென்று தண்ணீர் கேட்பதுபோல் அந்த பெண்ணிடம் பேசியுள்ளார். திரும்பத் திரும்ப அந்த பெண்ணை பல்வேறு இடங்களில் சந்தித்து தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, இளம் பெண்ணை வெளியில் அழைத்துச் சென்று லோகேஷ் தனிமையில் இருந்துள்ளார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, லோகேஷை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.