கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியை இளம்பெண் : குழந்தையை திருடிய போது அம்பலமான உண்மை!

 

கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியை இளம்பெண் : குழந்தையை திருடிய போது அம்பலமான உண்மை!

கடலூர் அருகே கருக்கலைந்ததை மறைக்க இளம்பெண் ஒருவர் பச்சிளங்குழந்தையை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த பாக்கியலட்சுமி என்பவரது குழந்தை நேற்று கடத்தப்பட்டது. இது குறித்து பாக்கியலட்சுமியின் கணவர் மணிகண்டன் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், இளம்பெண் ஒருவர் குழந்தையை திருடிக் கொண்டு புதுவை பேருந்தில் ஏறியது தெரிய வந்தது.

கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியை இளம்பெண் : குழந்தையை திருடிய போது அம்பலமான உண்மை!

விரைந்து பேருந்து நிலையத்துக்கு சென்ற போலீசார், அங்கு விசாரித்ததில் அந்த இளம்பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அந்த இளம்பெண் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் பெயர் நர்மதா என்பதும் கருவுற்ற 4 மாதத்தில் கருக்கலைந்ததும் அதை மறைத்து கர்ப்பமாக இருப்பதாக உறவினர்களை ஏமாற்றி வந்ததும் தெரிய வந்தது.

கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியை இளம்பெண் : குழந்தையை திருடிய போது அம்பலமான உண்மை!

அதோடு, வயிற்று வலிப்பதாக கூறி நேற்று மருத்துவமனைக்கு சென்ற நர்மதா தனக்கு குழந்தை பிறந்து விட்டதாக கூறி உறவினர்களை வரவழைத்ததும் உறவினர்களிடம் காட்டுவதற்காக கடலூரில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததும் அம்பலமானது. இதையடுத்து, நர்மதாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். நர்மதா கர்ப்பமாக இருப்பதாக நம்பிய உறவினர்கள், குழந்தையை பார்க்க வந்த போது ஏமாற்றமே மிஞ்சியது.