கேரளாவில் வங்கியின் கண்ணாடி கதவு மீது மோதியதில் பெண் பலி… பதற்றம், அவசரத்தால் உயிர் இழந்த பெண்

 

கேரளாவில் வங்கியின் கண்ணாடி கதவு மீது மோதியதில் பெண் பலி… பதற்றம், அவசரத்தால் உயிர் இழந்த பெண்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர் கோவபாடி பகுதியை சேர்ந்தவர் 46 வயதான பீனா ஜிஜூ பால். அவர் பெரும்பாவூரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். சம்பவத்தன்று வங்கிக்கு பீனா ஜிஜூ பால் தனது வாகனத்தில் சென்றுள்ளார். வங்கியின் உள்ளே சென்ற போது வண்டி சாவியை வண்டியிலேயே வைத்து விட்டு வந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது.

கேரளாவில் வங்கியின் கண்ணாடி கதவு மீது மோதியதில் பெண் பலி… பதற்றம், அவசரத்தால் உயிர் இழந்த பெண்

வண்டியிலிருந்து சாவி எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் வேகமாக வங்கியிலிருந்து வெளியே வர முயற்சி செய்துள்ளார். அப்போது வங்கியின் கதவு கண்ணாடி என்பதை மறந்து அதன் மீது மோதி கீழே விழந்து விட்டார். அவர் மோதிய வேகத்தில் கண்ணாடி கதவு துண்டு துண்டாக சிதறி கீழே விழுந்தது. அதில் ஒரு கண்ணாடி துண்டு பீனாவின் வயிற்றில் குத்தியது. கீழே விழுந்த பீனா எழுந்து நின்ற போது அவருக்கு காயம் பட்ட இடத்திலிருந்து இரத்தம் வடிய தொடங்கியது.

கேரளாவில் வங்கியின் கண்ணாடி கதவு மீது மோதியதில் பெண் பலி… பதற்றம், அவசரத்தால் உயிர் இழந்த பெண்

இதனையடுத்து அடுத்த சில நிமிடங்களில், வங்கியில் இருந்தவர்கள் பீனாவை உடனடியாக அருகில் இருந்த பெரும்பாவூர் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனையில் டாக்டர்கள் போராடியும் பீனாவின் உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. போலீஸ் அதிகாரி சம்பவம் இடந்த வங்கி கிளையை சென்று பார்வையிட்டார். பெரும்பாவூர் போலீசார் இதனை இயற்கைக்கு மாறான இறப்பாக பதிவு செய்துள்ளனர். பீனா கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு இருந்தால் அவருக்கு இந்த சோகமான நிகழ்வு ஏற்பட்டு இருக்காது. வங்கியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பலியான பீனா கண்ணாடி கதவில் மோதி விபத்துக்குள்ளானது தெளிவாக பதிவாகி உள்ளது.