பீகாரில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை ஜனநாயக கடமையாற்ற காத்திருக்கும் 2.35 கோடி வாக்காளர்கள்

 

பீகாரில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை ஜனநாயக கடமையாற்ற காத்திருக்கும் 2.35 கோடி வாக்காளர்கள்

பீகாரில் நேற்றுடன் 3வது மற்றும் இறுதி கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தது. நாளை 78 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பீகாரில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 28ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்த 71 தொகுதிகளில் 54.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இம்மாதம் 3ம் தேதியன்று இரண்டாவது கட்டமாக 94 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 53.51 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. நாளை எஞ்சியுள்ள 78 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

பீகாரில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை ஜனநாயக கடமையாற்ற காத்திருக்கும் 2.35 கோடி வாக்காளர்கள்
வாக்காளர்கள் (கோப்புபடம்)

3வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் 16 மாவட்டங்களின் 78 தொகுதிகளில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. நாளை இந்த 78 தொகுதிகளில் மொத்தம் 2.35 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை நாளை பதிவு செய்ய உள்ளனர். இதில் 1.23 கோடி ஆண்களும், 1.12 கோடி பெண்களும், 894 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.

பீகாரில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.. நாளை ஜனநாயக கடமையாற்ற காத்திருக்கும் 2.35 கோடி வாக்காளர்கள்
வாக்காளர்கள் (கோப்புபடம்)

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள 78 தொகுதிகளில் மொத்தம் 1,204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கைகட்டா தொகுதியில் அதிகபட்சமாக 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேசமயம் டாக்கா, திரிவேனிகஞ்ச், ஜோகிஹாட் மற்றும் பகதூர்கஞ்ச் ஆகிய தொகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நவம்பர் 10ம் தேதி பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.