இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டி: மீண்டும் சொதப்பிய இந்தியா!

 

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டி: மீண்டும் சொதப்பிய இந்தியா!

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தவான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Image

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்கினார். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக ஷிகர் தவான் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த தேவ்தட் படிகல்லும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கெய்க்வாட் 14 ரன்களிலும், சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் புவனேஷ்குமார் தனது பங்கிற்கு 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆரம்பத்திலிருந்து விக்கெட் விழுந்ததாலும் இந்திய அணியில் முதன்மையான பேட்ஸ்மேன்கள் இல்லாததாலும் இந்திய அணியின் ரன் ரேட் உயரவே இல்லை.

Image

கெய்க்வாட்,புவனேஷ் குமார்,குலதீப் யாதவ் ஆகியோரை தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணியை பொறுத்தவரை சிறப்பாக பந்து வீசிய வனிடு ஹசரங்கா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.