புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்து ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு அமைப்பு!

 

புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்து ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு அமைப்பு!

புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்து ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கல்வியை வலியுறுத்துவதால் அதற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் 39 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்படும் இந்த புதிய கல்விக் கொள்கை, கல்வியில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்றும் 2030க்குள் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை இது ஏற்படுத்தும் எனவும் மும்மொழி கல்வியில் தங்களுக்கு உகந்த மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்து ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு அமைப்பு!

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவின் ஆலோசனை படியே புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்து ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் செயல்பட உள்ள இக்குழுவில் பூஜா குல்கர்னி ஐஏஎஸ், லதா ஐஏஎஸ், சமக்ர சிக்‌ஷா, கவிதா ராமு ஐஏஎஸ், முனியநாதன் ஐஏஎஸ், அகிலா ராதாகிருஷ்ணன், என்.பஞ்சநாதன், ஜோதிமுருகன் பாலசுப்ரமணியம், மரியஜீனா ஜான்சன், ஆர்.இளங்கோவன், சுந்தரபரிபூரணம் பட்சிராஜன், வி.கே.ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.