ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பான ‘பானு சப்தமி’ சிறப்பு தினம் இன்று !

 

ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பான ‘பானு சப்தமி’ சிறப்பு தினம் இன்று !

தேய்பிறை அஷ்டமி இன்று. பானு என்றால் சூரியன் என்று அர்த்தம். சூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக் கிழமை. சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக வரும் நாள் ‘பானு சப்தமி’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது. இந்த நாளில் முதாதையரை நினைவு கொண்டு வணங்குவது, பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் பின் செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது என்பார் வைதீகர்கள்.

ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பான ‘பானு சப்தமி’ சிறப்பு தினம் இன்று !
முன்னோர்களின் ஆசி பெற்று முன்னேற்றம் பெற இந்நாளில் அவர்களை நினைந்து வழிபட சகல சௌபாக்கியமும் பெறலாம் . குறிப்பாக நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல் நல்லது என்றாலும் . முடியாத போது வீட்டில் குளியல் குளிக்கும் போது சப்த நதி திர்த்தங்களையும் மனதால் நினைந்து அந்நதிகரைகளிலேயே நிற்பதாக மனதால் பாவித்ததுக்கு கொண்டு நதி வணங்கி வழிபட்டு நிராட பலன்கள் கிடைக்கும் . இந்நாளில் தானம் செய்தல் பல்வேறு நலன்களைக் கொண்டுவரும். மற்ற தினங்களில் செய்யும் தான தர்மங்களை விடவும்.
இந்த தினத்தில் செய்யும் தானத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் அதிகம் கிடைக்கும்.

ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பான ‘பானு சப்தமி’ சிறப்பு தினம் இன்று !

சூரிய வழிபாடு:இந்த தினத்தில் சூரிய வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களும் கழியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்று விரதமிருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுபவர்களுக்கு நல்லது நடக்கும். இந்த தினத்தில் காலையில் எழுந்து நதியில் நீராடி நித்திய பூஜை மற்றும் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல வந்துசேரும்.

ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பான ‘பானு சப்தமி’ சிறப்பு தினம் இன்று !

கடன் தொல்லையை நீக்கும் மைத்ரேய முகூர்த்தம் . சிலரின் கை மண்ணை எடுத்தால் கூட பொன்னாக மாறிவிடும்’ என்று கூறுவார்கள். அப்படி விரைவாக முன்னேறுபவர்களை அதிர்ஷ்டம் உடையவர்கள் என்று கூறுவார்கள். ஆனால், அந்த அதிர்ஷ்டம் நம் அனைவருக்குமே இருக்கின்றது என்பது நமக்கு தெரியாது. நாம் தொடங்கும் காரியமானது எந்த நேரத்தில் ஆரம்பிக்கப்படுகிறது என்பதை வைத்து தான், அந்தச் செயலில் வெற்றி அமைகின்றது. இது சிலருக்கு புரிவதில்லை. இப்படி நாம் வாங்கும் கடனை எப்படி சுலபமாக திருப்பி தரலாம் என்ற சூட்சுமத்தை தெரியாதவர்களும் உள்ளார்கள். அவர்களுக்கான தீர்வு தான் இந்த மைத்ரேய முகூர்த்தம்.

ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பான ‘பானு சப்தமி’ சிறப்பு தினம் இன்று !

இந்த மைத்ரேய நேரத்தில் மைய பாகத்தை நாம் உபயோகப்படுத்திக் கொண்டால் மிகவும் நன்மை தரும். விரைவில் கடல் இல்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும். வங்கிக் கடனை திருப்பித் தரவும் இந்த முகூர்த்தம் பயன்படும்.

பானு ஸப்தமி தினத்தில் 1008 காயத்ரி ஜபம் ஸங்கல்பம் செய்து கொண்டு செய்யலாம். ஆதித்யஹ்ருதயம், சூர்ய காயத்ரி, தீக்ஷை பெற்ற மந்திரங்கள் ஜபம் செய்வதும் அதிக அளவில் நன்மை தரும்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி