யாருடா அவன்… அந்த நாயை தூக்கி வெளியே போடுங்க! தொண்டரை அசிங்கபடுத்திய ஆ. ராசா!

 

யாருடா அவன்… அந்த நாயை தூக்கி வெளியே போடுங்க! தொண்டரை அசிங்கபடுத்திய ஆ. ராசா!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தனியார் நிறுவனங்கள் லாபம் அடைவார்கள் என்றும் கூறி இன்று தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது . பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணித் தலைவர் உதயநிதி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி மர்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்தவகையில் பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தார். அப்போது கூட்டத்தில் இருந்த திமுக தொண்டர் ஒருவர், ஆ. ராசா வாழ்க என முழக்கமிட்டார். பேசிக்கொண்டிருக்கும்போது இடையூறு செய்ததால் ஆத்திரமடைந்த ஆர். ராசா,“யாருட ஆவன்,,, அவனைத்தூக்கி வெளியே போடுங்க.. அந்த நாய தூக்கி வெளியெ போடுங்க” எனக் கூறினார். பொதுக்கூட்டத்தில் திமுக தொண்டரை ஆ. ராசா நாய் என சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.