முதல்வரிடம் மன்னிப்பு கேட்டார் ஆ.ராசா

 

முதல்வரிடம் மன்னிப்பு கேட்டார் ஆ.ராசா

முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

முதல்வரிடம் மன்னிப்பு கேட்டார் ஆ.ராசா

திமுக எம்.பி. ஆ.ராசா சமீபத்தில் பரப்புரையின் போது நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம் பழனிசாமி. நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார்” என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்திற்கு ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி ஆர் ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சேலம் எடப்பாடியில் ராசாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

முதல்வரிடம் மன்னிப்பு கேட்டார் ஆ.ராசா

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி குறித்த விமர்சனத்திற்கு ஆக மன்னிப்பு கோருகிறேன் என்று திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். உதகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல; பொதுவாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு தான். முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.என்னால் முதல்வர் கண்கலங்கினார் என்பதை கேட்டு மனம் வேதனை அடைந்தேன்.எனது பேச்சால் முதல்வர் உள்ளபடியே காயப்பட்டு இருந்தால் மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன்” என்றார்.