“இம்சை அரசனாக மாறிய இன்ஸ்பெக்டர்” -நடுரோட்டில் மனைவியை அடிக்கும் வீடியோ வைரல்.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவின் பிரிவு -122 இன் பார்த்தலா சவுக்கியின் துணை ஆய்வாளர் விகாஸ் சவுகான் என்பவருக்கும் அவரின் மனைவிக்குமிடையே பல நாட்களாக சண்டை வந்துள்ளது .அதனால் அவர் தன்னுடைய மனைவியை நடுரோட்டிலேயே அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலானது
இந்த வீடியோவை கவுதம் புத் நகர் போலீஸ் கமிஷனர் பார்த்துள்ளார் .அதன் பேரில் அந்த போலீஸ் அதிகாரியிடம் அவர் விசாரணை நடத்தி அவரை பணி இடை நீக்கம் செய்தார்
இந்த சம்பவம் கிரேட்டர் நொய்டாவில் நடந்தது. போலீஸ் அதிகாரி விகாஸ் சவுகான் தனது மனைவியை பஞ்ச்ஷீல் ஹைனிஷில் உள்ள தனது குடியிருப்பு வளாகத்திற்குள் உதைப்பதை அந்த வீடியோவில் காணலாம் மேலும் அந்தப் பெண்ணை மீட்க பாதுகாப்புப் படையினர் வந்தபோது, அவர் தனது துப்பாக்கியால் அவர்களை மிரட்டுகிறார் .
அதே குடியிருப்பில் வசிக்கும் சிலர் , விகாஸ் சவுகான் இந்த சம்பவத்தின் போது குடி போதையில் இருந்ததாகவும், அந்த குடியிருப்பில் இருக்கும் மற்றவர்களையும் அவர் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறினார்கள் .மேலும் அவர்களது பிளாட்டை நோக்கிச் செல்லும்போது, சில பிரச்சினைகள் தொடர்பாக அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது .அப்போது , விகாஸ் தனது மனைவியை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார். பின்னர் சமூகப் பாதுகாப்புப் படையினர் அந்தப் பெண்ணை மீட்க வந்தபோது, அந்த எஸ்ஐ பாதுகாப்பு காவலர்களுடன் தவறாக நடந்து கொண்டார்” என்று நொய்டாவின் டி.சி.பி ஹரிஷ் சந்தர் கூறினார். விகாஸ் சவுகான் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், துறை சார்ந்த விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் டி.சி.பி.மேலும் கூறினார் .