கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் குழந்தைகளுக்கு விரும்பும் கல்லூரிகளில் படிக்க இடம்!

 

கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் குழந்தைகளுக்கு விரும்பும் கல்லூரிகளில் படிக்க இடம்!

கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களின் நலனை பேணும் வகையில், பிளஸ்-2 முடித்து மேற்படிப்புக்கு காத்திருக்கும் அந்த காவலர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் கல்லூரிகளில், விரும்பும் படிப்புகளில் சேர சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் பெரும் முயற்சி செய்து ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி கடந்த மாதம் 20 ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு கல்லூரி சேர்க்கை கடிதங்களை வழங்கினார்.

கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் குழந்தைகளுக்கு விரும்பும் கல்லூரிகளில் படிக்க இடம்!

இதன் தொடர்ச்சியாக இன்று எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் கலந்து கொண்டு, 2-ம் கட்டமாக மாணவ- மாணவிகளுக்கு சேர்க்கை கடிதங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.