வீரியம் மிக்க புதிய கொரோனா : பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு பாதிப்பு உறுதி!

 

வீரியம் மிக்க புதிய கொரோனா : பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு பாதிப்பு உறுதி!

பிரிட்டனில் கொரோனா தீவிரமடைந்துள்ளது குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று காதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வீரியம் மிக்க புதிய கொரோனா : பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு பாதிப்பு உறுதி!

பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் புதிதாக 33 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள விமானநிலையங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வீரியம் மிக்க புதிய கொரோனா : பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு பாதிப்பு உறுதி!

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரிட்டனில் கொரோனா தீவிரமடைந்துள்ளது குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. லண்டனில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள் வந்துள்ளன; பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒரு நபருக்கு கொரனோ உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியான நபர் வீட்டு தனிமையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். கடந்த 10 நாட்களில் லண்டனில் இருந்து வந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

வீரியம் மிக்க புதிய கொரோனா : பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு பாதிப்பு உறுதி!

பிரிட்டனில் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சென்னை வந்தவருக்கு பாதிப்பு உறுதி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.