`என்னடா லவ் ஜிகாத் செய்கிறாயா?’ இந்து முன்னணியினரின் வெறிச் செயல்!

 

`என்னடா லவ் ஜிகாத் செய்கிறாயா?’ இந்து முன்னணியினரின் வெறிச் செயல்!

கோவையில் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்கடம் கோட்டைமேடு எஸ்.எஸ்.கோவில் வீதி எஸ்.டி.பி.ஐ. 82-வது கிளை தலைவரான முகமது முபாரக் மகன் அகில் அகமது (வயது 27). இவர் நேற்று ராமநாதபுரம் பகுதியில் தன்வந்திரி கோயில் அருகே தன்னுடைய தோழி சாருலதா என்ற பெண்ணுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சஞ்சய் என்கிற சச்சின் ஆகியோர் அகில் அகமதுவைவிடம் ”என்னடா லவ் ஜிகாத் செய்கிறாயா?” என மிரட்டியதுடன், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அகிலை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

`என்னடா லவ் ஜிகாத் செய்கிறாயா?’ இந்து முன்னணியினரின் வெறிச் செயல்!

இந்த தகவல் அறிந்ததும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த இப்ராஹிம் மற்றும் அதன் உறுப்பினர்கள் அரசு மருத்துவமனையில் கூடினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ராமநாதபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்றவாளி கார்த்திக் மற்றும் சச்சினை தேடி வருகின்றனர். கார்த்திக் மீது ஏற்கனவே பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.