‘மகனை கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்ற தாய்’ : கள்ளக்காதலன் எடுத்த வீடியோவால் அம்பலம்!
காஞ்சிபுரம் அருகே கள்ளக்காதலனுடன் தனிமையில் இருக்க தாய், தனது மகனை கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சித்ரா (20)- ஆனந்தன் (45). சித்ரா ஆனந்தனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே, பல ஆண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அவருக்கு கார்த்திக் (5), அருண் (2) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். ஊர் வாயை அடைப்பதற்காகவே ஆனந்தனை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகும் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், இவரது இளைய மகன் அருண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனுக்கு சென்னை கே.எம்.சி. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்த போது, அந்த விபத்தில் அருண் சிக்கிக் கொண்டதாக சித்ரா போலீசில் சொல்லி எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த நிலையில், சித்ராவின் மூத்த மகன் கார்த்திக் ஸ்ரீபெரும்புதூர் அருகே முட்புதரில் கிடந்துள்ளார். சித்ராவின் மகன் என அடையாளம் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சிறுவனிடம் போலீசார் விசாரித்ததில் தாயாருடன் செல்ல சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால், போலீசார் சிறுவனை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே, சித்ரா குழந்தையின் கழுத்தை நெறிப்பது போன்ற வீடியோ போலீசார் கவனத்துக்கு எட்டியுள்ளது. சித்ராவுடன் தனிமையில் இருந்த கள்ளக்காதலன் ஒருவர், தனது மகனை சித்ரா கொல்ல முயற்சிப்பதை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.
அதனிடப்படையில் சித்ராவை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலர்களுடன் தனிமையில் இருக்க குழந்தைகள் இடையூறாக இருப்பதாகவும் அதனால் கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். சித்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இளைய மகன் அருணையும் சித்ரா தான் கொலை செய்ய முயன்றாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .