கிரைண்டர் கல்லை போட்டு மகளையே கொன்ற தாய்… தகாத உறவால் கொடூரச் செயல்!

 

கிரைண்டர் கல்லை போட்டு மகளையே கொன்ற தாய்… தகாத உறவால் கொடூரச் செயல்!

மேட்டுப்பாளையம் அருகே தவறான உறவில் இருந்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கணுவாய்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் நாகமணி(47). கணவர் இறந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகள் நதியா(31). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் ஆன நிலையில் இவருக்கு 13 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவரது கணவர் சரவணகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கிரைண்டர் கல்லை போட்டு மகளையே கொன்ற தாய்… தகாத உறவால் கொடூரச் செயல்!

கணவன் உயிரிழந்த பிறகு தனது பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கே வந்த நதியா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். பல்வேறு நபர்களுடன் நதியா தகாத உறவு வைத்திருந்ததாக நாகமணிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இருவருக்குமே குடிப்பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு மதுபோதையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அடிக்கடி செல்போனில் பேசக்கூடாது என தாயார் நாகமணி கண்டித்துள்ளார். அதை நதியா கேட்கவில்லையாம். ஆத்திரமடைந்த நாகமணி நதியா படுத்து உறங்கிய பிறகு கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டு நதியாவை கொடூரமாக கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த காரமடை போலீசார் நதியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தாயார் நாகமணியை கைது செய்து விசாரணை வருகின்றனர்.