அசாமில் பயங்கரமான நிலநடுக்கம்… கட்டடங்களில் விரிசல்!

 

அசாமில் பயங்கரமான நிலநடுக்கம்… கட்டடங்களில் விரிசல்!

அசாமில் இன்று காலை 7.51 மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தின் அதிர்வானது வடகிழக்கு மாநிலங்களிலும், வடக்கு வங்காளத்திலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது அசாம் மாநிலத்தின் தேஜ்பூரிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Image

பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாகவும், ஆனால் அதிருஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஒருசில இடங்களிலுள்ள கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன.