மயக்க நிலையில் மானபங்கம் செய்த மந்திரவாதி -மனநோய் சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி ..

 

மயக்க நிலையில் மானபங்கம் செய்த மந்திரவாதி -மனநோய் சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி ..

மனநோய்க்கு சிகிச்சையளிப்பதாக கூறி திருமணமான ஒரு இளம்பெண்ணை ஒரு மந்திரவாதி பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்ச்சியடைய வைத்துள்ளது .

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு இளம் தம்பதிகள் திருமணமாகி குடிவந்தனர் . கல்யாணமான நாள் முதல் 20 வயதான அந்த பெண்ணுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டு மிகவும் ஆக்ரோஷமாக வெறியுடன் நடந்து கொள்வார்.இதனால் மனம் நொந்த அவரின் கணவர் அவரை பல இடங்களில் சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனளிக்கவில்லை .

மயக்க நிலையில் மானபங்கம் செய்த மந்திரவாதி -மனநோய் சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி ..இந்நிலையில் அவர்கள் வீட்டுக்கு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு மந்திரவாதி வந்தார். அவர் அந்த பெண்ணை தன்னுடைய ஊருக்கு சிகிச்சைக்கு கூட்டி வருமாறு கூறி, அதற்கான கட்டணமாக ரூபாய் 5000 வாங்கிக்கொண்டார் .அவரின் பேச்சை நம்பிய அந்த பெண்ணின் கணவர் தன்னுடைய மனைவியை அந்த மந்திரவாதியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் .அப்போது கணவனை வெளியே இருக்க சொல்லிவிட்டு மனைவிக்கு சிகிச்சையளிப்பதாக கூறி தனியே அழைத்து சென்று, அந்த மந்திரவாதி அந்த பெண்ணுக்கு சில மூலிகையினை கொடுத்து மயக்கமுற செய்து, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .

மயக்க நிலையில் மானபங்கம் செய்த மந்திரவாதி -மனநோய் சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி ..மயக்கம் தெளிந்து எழுந்த அவர், தான் மந்திரவாதியால் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியுற்று , தனக்கு மந்திரவாதியால் நடந்த கொடுமைகளை தன்னுடைய கணவரிடம் கூறியுள்ளார். இதனால் கோபமுற்ற கணவன் இதுபற்றி மந்திரவாதியிடம் கேட்டதற்கு, அந்த மந்திரவாதி அவர்களை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார் .இதனால் பயந்து போன அவர்கள் நொய்டா போலீசில் அவர் மீது புகாரளித்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .