“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா?”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற காதலன் ..

 

“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா?”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற  காதலன் ..

தான் காதலித்த பெண் தன்னை கழட்டி விட்டுவிட்டு ,வேறொருவரை திருமணம் செய்ய இருப்பதை கேள்விப்பட்ட அவரின் காதலன் அவரை திருமணத்தன்றே பியூட்டி பார்லரிலேயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .

“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா?”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற  காதலன் ..
மத்தியபிரதேச மாநிலம் ரத்தலம் மாவட்டத்தில் உள்ள ஜோரா நகரில் வசிக்கும் சோனு யாதவ் என்ற பெண் மூன்றாண்டுக்கு முன் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்தார் .அப்போது ராம் யாதவ் என்ற நபரை காதலித்து வந்தார் .இருவரும் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்தனர் .இந்நிலையில் சோனு நேற்று வேறொருவரை இரண்டாவது திருமணம் செய்யவிருந்தார் .அதற்கான ஏற்பாடுகள் நடந்தது ,
இந்த தகவல் கேள்விப்பட்ட ராம் அவரை கொலை செய்ய முடிவு செய்தார் .அதனால் அவர் சோனு இருக்குமிடம் தேடினார் .அப்போது அவர் தன் திருமணத்திற்காக மேக் அப் போட்டு தயாராக, பியூட்டி பார்லரில் இருக்கும் விஷயம் கேள்விப்பட்டு அங்கு அவர் ஓடி வந்தார் ,.

“காதலிக்க நான் ,கல்யாணத்துக்கு அவனா?”-இரண்டாவது கல்யாணம் செய்யவிருந்த பெண்ணை கொன்ற  காதலன் ..
அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ராம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோனுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் .இதில் சோனு ரத்த வெள்ளத்தில் மணக்கோலத்தில் அங்கேயே பிணமானார் .பிறகு ராம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இது பற்றி தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராமை பிடிக்க அவரின் நண்பர் பஞ்சல் மூலம் முயன்று வருகிறார்கள் .