மருமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பா? கிளினீக்கில் வைத்து இளம்பெண்ணை அடித்து உதைத்த கொடூரம்!

 

மருமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பா? கிளினீக்கில் வைத்து இளம்பெண்ணை அடித்து உதைத்த கொடூரம்!

திருப்பத்தூர் கச்சேரித் தெருவில் வசித்து வருபவர் மருத்துவர் மனோஜ்குமார். இவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் நிலையில் வீட்டிலேயே கிளினீக் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மருத்துவ படிப்பிற்காக வெளியூரில் தங்கியுள்ளார்.

மருமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பா? கிளினீக்கில் வைத்து இளம்பெண்ணை அடித்து உதைத்த கொடூரம்!

மருத்துவர் மனோஜ் கோட்டைத் தெருவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் நட்புறவுடன் பழகியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் அடிக்கடி அந்த கிளீனிக்கிற்கு வந்து சென்றுள்ளார். இது மனோஜ் குமாரின் மாமனார் ரவிக்கு தெரிந்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றும் ரவி திருப்பத்தூரில் பல அரசியல் தொடர்புகளை உடையவர் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களை கையும் களவுமாக பிடிக்க எண்ணி கிளீனிக்கை வெளிப்புறமாக பூட்டியுள்ளார். பின்னர் அந்த இடத்திற்கு தனது ஆட்களை வர செய்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.

மருமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பா? கிளினீக்கில் வைத்து இளம்பெண்ணை அடித்து உதைத்த கொடூரம்!

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதற்கான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்தப் பெண்ணிடம், “மருத்துவர் மனோஜ் குமாருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என எழுதி வாங்கப்பட்டது. நள்ளிரவு 12 மணி வரை நடந்த இந்த கட்டப்பஞ்சாயத்து இறுதியாக முடிந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் வெளியில் வந்த அந்த பெண்ணை மீண்டும் ஒருவர் தாக்கியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவில்லை என்றாலும் காவல்துறையினரும் புகாரை பெறும் நோக்கத்தில் இல்லை என தெரிகிறது.