காதலை ஏற்க மறுத்த பெற்றோர்… டவரில் ஏறி தற்கொலை முயற்சி செய்த இளைஞர்!

 

காதலை ஏற்க மறுத்த பெற்றோர்… டவரில் ஏறி தற்கொலை முயற்சி செய்த இளைஞர்!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் ஒரு செல்போன் டவர் இருக்கிறது. அதன் மீது நேற்று மாலை ஒரு இளைஞர் ஏறுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில், தான் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன் (25) என்றும் இப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை தான் காதலித்து வருவதாகவும் அதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகவும் கூறினார். மேலும் தன்னை அந்த பெண்ணுடன் சேர்த்து வைக்கவில்லை என்றால் டவரில் இருந்து குதித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

காதலை ஏற்க மறுத்த பெற்றோர்… டவரில் ஏறி தற்கொலை முயற்சி செய்த இளைஞர்!

இதனிடையே அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், அந்த நபரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த நபரை தீயணைப்பு வீரர்கள் கீழே இறக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் அழைத்து விசாரித்ததில், தாங்கள் இரண்டு பேரும் காதலிக்கவில்லை என்று அந்த பெண் கூறியிருக்கிறார்.