“டேய் பைக்ல வாடா ,என்னை கூட்டிட்டு போடா ” -பைக் கேட்ட காதலிக்காக , காதலன் செஞ்ச வேலையை பாருங்க .

 

“டேய் பைக்ல வாடா ,என்னை கூட்டிட்டு போடா ” -பைக் கேட்ட காதலிக்காக , காதலன் செஞ்ச வேலையை பாருங்க .

தன்னுடைய காதலியோடு உல்லாசமாக ஊர் சுற்ற ஒரு வாலிபர் 20க்கும் மேற்பட்ட பைக்கை திருடியதால் கைது செய்யப்பட்டார்

“டேய் பைக்ல வாடா ,என்னை கூட்டிட்டு போடா ” -பைக் கேட்ட காதலிக்காக , காதலன் செஞ்ச வேலையை பாருங்க .

மும்பை மற்றும் மீரா-ரோட்டில் இருந்து பைக்குகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் பல அடிக்கடி திருடு போவதாக போலீசுக்கு புகார்கள் குவிந்த வண்ணமிருந்தன .அதனால் போலீசார் அந்த பைக் திருடனை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்தனர் .

அப்போது சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அருகே,இரவில் போலீசார் ரோந்து சென்றபோது,சிலர் சந்தேகத்துடன் அந்த பகுதியில் சுற்றி வருவதை  கவனித்தனர். அப்போது அவர்களிடம் இரண்டு டீனேஜ் வாலிபர்கள் சிக்கினார்கள் .அந்த வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன .அவர்கள் கொடுத்த தகவல் படி இருவரில் ஒருவர், தான்  காதலிக்கும் காதலி பைக் இருந்தால்தான் தன்னை காதலிப்பதாக கூறியதாகவும் ,அதனால் அவரை அசத்துவதற்காக விதவிதமான பைக்குகளை திருடியதாகவும் கூறினார் .மேலும் அவர் திருடிய பைக்கில் தன்னுடைய காதலியை கூட்டிக்கொண்டு பல இடங்களுக்கு சுற்றி வந்ததாகவும் கூறினார் . மேலும் இருவரும் திருடிய  பைக் மற்றும் ஆட்டோவை பல்வேறு நபர்களுக்கு விற்றுள்ளனர், அந்த  பணத்தை கொண்டு  காதலியை மகிழ்விக்க  செலவிட்டுள்ளார்கள் .மேலும் அவர்களிடமிருந்து அந்த திருட்டு வாகனத்தை வாங்கிய பலரையும் போலீசார் விசாரித்து அவர்களையும் கைது செய்தார்கள்

மேலும் அவர்கள் பல்வேறு பகுதிகளில் திருடிய  10 ஆட்டோக்கள், 20 பைக்குகள் மற்றும் 27  சைக்கிள்களை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் அவர்களில் இன்னொருவரின்  திருட்டுக்கான  நோக்கம் ஜாய்ரைடிங்என்பது விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டது.அதனால் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“டேய் பைக்ல வாடா ,என்னை கூட்டிட்டு போடா ” -பைக் கேட்ட காதலிக்காக , காதலன் செஞ்ச வேலையை பாருங்க .