கடனைக் கேட்டு மிரட்டிய அதிகாரிகள்… வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் மரணம்!

 

கடனைக் கேட்டு மிரட்டிய அதிகாரிகள்… வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் மரணம்!

தஞ்சையில் வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வல்லத்தை சேர்ந்த ஆனந்த்(40) வல்லம் சிட்டி யூனியன் வங்கியில் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியிருந்தார். வாங்கிய கடனில் 13 லட்சம் ரூபாய் கட்டிய நிலையில் மேலும் 6 லட்சத்தை அதிகாரிகள் உடனடியாக கட்ட கூறியுள்ளனர். இல்லையென்றால் வீட்டை ஏலத்தில் விடுவேன் என அறிவித்தால் நேற்று முன்தினம் வங்கியின் முன்பு தீக்குளித்தார்.

கடனைக் கேட்டு மிரட்டிய அதிகாரிகள்… வங்கி முன்பு தீக்குளித்த இளைஞர் மரணம்!

இதில் படுகாயமடைந்த ஆனந்த், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.