தனியாக இருந்த பெண் -சுவரேறி குதித்த மைத்துனர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

 

தனியாக இருந்த பெண் -சுவரேறி குதித்த மைத்துனர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஒரு வீட்டில் தனியாக இருந்த அண்ணியை அவரின் மைத்துனரும் அவரின் நண்பரும் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்

தனியாக இருந்த பெண் -சுவரேறி குதித்த மைத்துனர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில்  சர்தானா தெஹ்ஸில் பகுதியில் ஒரு பெண் தன்னுடைய குடிகார கணவரோடு வசித்து வந்தார் .அந்த பெண்ணின் கணவர் ஒரு குடிகாரர் என்பதால் அடிக்கடி வீட்டில் அவரின் மனைவியை தனியாக விட்டு விட்டு காணாமல் போய் விடுவார் .இதை அந்த பெண்ணின் கணவரின் தம்பி நோட்டமிட்டு வந்துள்ளார் .

கடந்த செவ்வாய் கிழமை இரவு அந்த பெண்ணின் மைத்துனர், தன்னுடைய நண்பர் ஒருவரோடு ஒரு துப்பாக்கியை எடுத்து கொண்டு அவரின் அண்ணி வீட்டிற்குள் வர முயன்றார் .அப்போது அவரின் கணவர் வீட்டில் இல்லாததால் யாரும் கதவை திறக்கவில்லை .அதனால் அந்த மைத்துனர் அந்த வீட்டின் சுவரேறி குதித்து வீட்டிற்குள் சென்றார் .பிறகு அவரும் அவரின் நண்பரும் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, அவரின் அண்ணியை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .பிறகு இந்த விஷயத்தை  வெளியே சொன்னால் அவரை சுட்டு கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர் .பிறகு  அந்த பெண் தன்னுடைய குடிகார கணவரை தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப்போனார் .பின்னர் அவர் மட்டும் தனியாக அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த மைத்துனர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் அந்த மைத்துனர் மற்றும் அவரின் நண்பர் மீது பலாத்கார வழக்கு பதிந்து அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர் .

தனியாக இருந்த பெண் -சுவரேறி குதித்த மைத்துனர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்