“என் அண்ணன் பாத்த பொண்ண நீ பாக்க கூடாது” -வாலிபரை கொன்ற சகோதரர்கள்.

 

“என் அண்ணன் பாத்த பொண்ண நீ பாக்க கூடாது” -வாலிபரை கொன்ற சகோதரர்கள்.

ஒரு முக்கோண காதல் தகராறில், ஒரு வாலிபரை இரு சகோதரர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது

“என் அண்ணன் பாத்த பொண்ண நீ பாக்க கூடாது” -வாலிபரை கொன்ற சகோதரர்கள்.

ராய்ப்பூரைச் சேர்ந்த 18 வயது ராகுல் தாண்டி என்பவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார் .ஆனால் அவர் காதலிக்கும் பெண்ணை இன்னொருவரும் காதலித்துள்ளார் .அதனால் அந்த நபருக்கும் தாண்டிக்கும் விரோதம் உண்டாகியுள்ளது .அந்த நபர் பலமுறை தாண்டியிடம் தன்னுடைய காதலியை மறந்து விடுமாறு கூறியுள்ளார் .ஆனால் அவர் அதற்கு சம்மதிக்காமல் இருந்துள்ளார் .


அதனால் அந்த வாலிபர் தண்டியை கொலை செய்ய முடிவெடுத்தார் .அதன் காரணமாக கடந்த வாரம் அவர் தன்னுடைய 17 வயதான தம்பியிடம் தண்டியை ஒரு பகுதிக்கு கூட்டி வருமாறு கூறியுள்ளார் .அதன் படி அவரும் தண்டியை ஒரு பைக்கில் ஏற்றிக்கொண்டு ஒரு இடத்திற்கு கூட்டி சென்றார் .அங்கு ஏற்கனவே காத்துகொண்டு இருந்த அவரின் சகோதரர் தண்டியை அடித்து கத்தியால் குத்தி கொலை செய்ய அவரின் தம்பியிடம் கூறினார் .அதனால் அண்ணனுக்காக அவரின் தம்பி தண்டியை கத்தியால் குத்தினார் அந்த காட்சியை அவரின் சகோதரரே படம் பிடித்தார் .அந்த வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது .மேலும் அந்த வீடியோவில் பொது மக்கள் இந்த் சம்பவத்தை வேடிக்கை பார்க்கும் அவல நிலை தெரிகிறது .
அப்போது அந்த நபர் கடுமையான மது போதையில் இருந்துள்ளார் .தண்டி இறந்த பிறகு அவரை கத்தியால் தொடர்ந்து குத்தும் காட்சி ஊடகத்தில் வெளியான வீடியோவில் தெரிகிறது .அதன் பிறகு அவரின் அண்ணனே அந்த கொலை சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார் .அதன் பிறகு இருவரும் பைக்கில் ஏறி சென்றார்கள் .இந்த கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

“என் அண்ணன் பாத்த பொண்ண நீ பாக்க கூடாது” -வாலிபரை கொன்ற சகோதரர்கள்.