“சொத்து கொடு இல்லேன்னா செத்து விடு”-மகனால் தாய்க்கு நேர்ந்த நிலை

 

“சொத்து கொடு இல்லேன்னா செத்து விடு”-மகனால் தாய்க்கு நேர்ந்த நிலை


ஒரு மகன் சொத்து கொடுக்காத தன்னுடைய தாயை அடித்து கொன்ற விஷயம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

“சொத்து கொடு இல்லேன்னா செத்து விடு”-மகனால் தாய்க்கு நேர்ந்த நிலை


மத்திய பிரதேசத்தில் போபாலில் பவாடியா குர்தில் வசிக்கும் ஒரு 80 வயதான பெண் கலாபாய் குர்ஜாருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் .அந்த பெண் தன்னுடைய கணவர் பாபுலால் இறந்த பிறகு தன்னுடைய சொத்துக்களை நான்கு பகுதிகளாக பிரித்தார் .அப்போது ஒரு பங்கை தனக்கு வைத்துக்கொண்டு மீதி பங்கை மூன்றாக பிரித்து தன்னுடைய மூன்று மகன்களுக்கு கொடுத்தார் .
இந்த சொத்து பிரித்தில் அவருடைய ஒரு மகன் கியான் சிங் திருப்தியடையவில்லை .அதனால் தன்னுடைய தாயிடம் அடிக்கடி அவரின் பங்கையும் தனக்கு கொடுக்குமாறு சண்டை போட்டுள்ளார் .அனால் அந்த தாய் தனக்கு பிறகு தான் தன் சொத்து உனக்கு கிடைக்கும் என்று கூறினார் .
அதனால் கோபமுற்ற அவரின் மகன் கியான் சிங் அந்த தாயை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்து விட்டார் .இந்த விஷயத்தை அவர் மறைக்க தன்னுடைய சகோதரர் மற்றும் சகோதரிகளிடம் தாய் கட்டிலிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார் என்று பொய் சொன்னார் .ஆனால் சந்தேகப்பட்ட அவர்கள் அவரின் தாயை அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவர் அடித்து கொலை செய்த விவரம் தெரிந்தது .இதனால் போலீஸ் வரவைக்கப்பட்டு நடந்த விசாரணையில் அவர் தன்னுடைய தாயை சொத்துக்காக கொன்ற விஷயத்தை ஒப்புக்கொண்டார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மகன் கியான் சிங்கை கைது செய்தார்கள் .மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது .

“சொத்து கொடு இல்லேன்னா செத்து விடு”-மகனால் தாய்க்கு நேர்ந்த நிலை