சிகிரெட் கொடுக்க மறுத்த டீக்கடைக்காரர்.. கடையை தீ வைத்துக் கொளுத்தி விட்டு நாடகம் ஆடிய நபர்!

 

சிகிரெட் கொடுக்க மறுத்த டீக்கடைக்காரர்.. கடையை தீ வைத்துக் கொளுத்தி விட்டு நாடகம் ஆடிய நபர்!

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அச்சம்பத்து என்னும் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் இருக்கும் பூமிநாதன் என்பவரின், டீக்கடையை யாருக்கும் தெரியாமல் தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். கடை தீப்பற்றி எறிந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்ப துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சிகிரெட் கொடுக்க மறுத்த டீக்கடைக்காரர்.. கடையை தீ வைத்துக் கொளுத்தி விட்டு நாடகம் ஆடிய நபர்!

உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர். அதற்குள் கடையில் இருந்த பொருள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முற்படும் போது, குணசேகரனும் அவர்களுடன் இணைந்து தீயை அணைப்பது போல நாடகம் ஆடியிருக்கிறார். அதன் பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குணசேகரன் தான் தீ வைத்துக் கொளுத்தியதும், ஏதும் தெரியாதது போல எல்லாருடனும் சேர்ந்து தீயை அணைத்ததும் தெரிய வந்துள்ளது.

சிகிரெட் கொடுக்க மறுத்த டீக்கடைக்காரர்.. கடையை தீ வைத்துக் கொளுத்தி விட்டு நாடகம் ஆடிய நபர்!

இதனையடுத்து போலீசார் குணசேகரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது குணசேகரன், தான் சிகிரெட் கேட்ட போது பூமிநாதன் தரவில்லை என்றும் அதற்காக தான் அவர் கடையை கொளுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும், தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.