‘உல்லாசத்தின் போது சண்டை’..கள்ளக்காதலியை சுத்தியால் அடித்து கொலை செய்த கள்ளக்காதலன் தற்கொலை!

 

‘உல்லாசத்தின் போது சண்டை’..கள்ளக்காதலியை சுத்தியால் அடித்து கொலை செய்த கள்ளக்காதலன் தற்கொலை!

கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி திலகவதி(33). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வருபவர் பத்மநாபன்(37). கோழிக்கடை வைத்திருக்கும் இவரும் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பத்மநாபனுக்கும் திலகவதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

‘உல்லாசத்தின் போது சண்டை’..கள்ளக்காதலியை சுத்தியால் அடித்து கொலை செய்த கள்ளக்காதலன் தற்கொலை!

இவர்கள் இரண்டு பேரும் தனியாக சந்திப்பது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்தநிலையில் , நேற்று முன்தினமும் அதே போல அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் கொட்டகை ஒன்றில் சந்தித்துள்ளனர். அப்போது உல்லாசமாக இருந்த இவர்களுக்கிடையே சண்டை வந்துள்ளது. அதாவது திலகவதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த பத்மநாபன், அருகே இருந்த சுத்தியால் அவரை அடித்திருக்கிறார். அதில் படுகாயம் அடைந்த திலகவதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

‘உல்லாசத்தின் போது சண்டை’..கள்ளக்காதலியை சுத்தியால் அடித்து கொலை செய்த கள்ளக்காதலன் தற்கொலை!

இதனால் பயந்து போன பத்மநாபன், அந்த கொட்டகையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.