கருப்பர் கூட்டம் வீடியோவால் மனதளவில் புண்பட்டதால் பெரியார் சிலை மீது சாயம் ஊற்றினேன் – சரணடைந்த அருண் வாக்குமூலம்

 

கருப்பர் கூட்டம் வீடியோவால் மனதளவில் புண்பட்டதால் பெரியார் சிலை மீது சாயம் ஊற்றினேன் – சரணடைந்த அருண் வாக்குமூலம்

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக ஒருவர் போத்தனூர் போலீசில் சரணடைந்துள்ளார். சரணடைந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருப்பர் கூட்டம் வீடியோவால் மனதளவில் புண்பட்டதால் பெரியார் சிலை மீது சாயம் ஊற்றினேன் – சரணடைந்த அருண் வாக்குமூலம்

இந்நிலையில் சுந்தராபுரம் பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக அருண் கிருஷ்ணா மீது குனியமுத்தூர் போலிசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருப்பர் கூட்டம் வீடியோவால் முருக பக்தராகிய தான் மனதளவில் புண்பட்டதால் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியதாக காவல்துறையினரிடம் சரணடைந்த அருண் கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.