குடிபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்; பொள்ளாச்சி அருகே பரபரப்பு!

 

குடிபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்; பொள்ளாச்சி அருகே பரபரப்பு!

ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து மது இல்லாமல் தவித்து வந்த குடிமகன்களுக்காக, கடந்த 16 ஆம் தேதி மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. அன்றில் இருந்து மதுபோதையில் பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே மதுபோதையில் டவர் மீது ஏறிய நபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது.

குடிபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்; பொள்ளாச்சி அருகே பரபரப்பு!

பொள்ளாச்சி அருகே உள்ள கொங்குநாட்டான்புதூரைச் சேர்ந்த குமார், கடந்த சில நாட்களாக மது இல்லாமல் தவித்து வந்த நிலையில் நேற்று அளவுக்கு அதிகமாக குதித்துள்ளார். இதனால் மதுபோதையில் இருந்த அவர், அருகில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை விடுத்துள்ளார். அவரை கீழே இறங்குமாறு ஊர்மக்கள் பலர் சொல்லியும் அவர் கேட்கவில்லையாம்.

தகவல் அறிந்து வந்த போலீசார், குமாருடன் சுமார் ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி அவரை கிழே இறங்க வைத்துள்ளனர். அதன் பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.