’10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்’… கோவில் அர்ச்சகர் போக்சோவில் கைது!

 

’10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்’… கோவில் அர்ச்சகர் போக்சோவில் கைது!

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுளளது. இந்த ஊரடங்கால் குடும்ப பிரச்னைகளும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் 10 வயது சிறுமிக்கு கோவில் அர்ச்சகர் பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை நடந்துள்ளது.

’10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்’… கோவில் அர்ச்சகர் போக்சோவில் கைது!

 

சென்னை மாடிப்பக்கம் அருகே வசித்து வரும் 10 வயது சிறுமியிடம், சிவக்குமார்(59) என்னும் கோவில் அர்ச்சகர் கடந்த புதன் கிழமை தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்து கொண்ட கோவில் அர்ச்சகர், அன்றில் இருந்து தலைமறைவாகியுள்ளார். அவர் மீண்டும் வீட்டுக்கு வருகிறாரா என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே வந்துள்ளனர்.

இதனையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த அர்ச்சகர், தனது உடைமைகளை எடுத்துச் செல்ல வீட்டுக்கு வந்துள்ளார். அதனை கண்டுபிடித்த ஊர்மக்கள் வீட்டுக்குள்ளேயே அவரை வைத்து பூட்டி விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சிவக்குமாரை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.