முயல் பிடிக்க சென்ற நபர்.. தவறுதலாக நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பரிதாப உயிரிழப்பு!

 

முயல் பிடிக்க சென்ற நபர்.. தவறுதலாக நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பரிதாப உயிரிழப்பு!

நாமக்கல் மாவட்டம் வலசு கொமாரபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் சக்திவேல் (24), தோனி (17). இவர்கள் இரண்டு பேரும் ஊத்துக்குளிகாடு பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார் என்பவருடன் ராசிபுரம் அருகே உள்ள சிங்கிலியன் கோம்பை பகுதிக்கு முயல் வேட்டை ஆட சென்றுள்ளனர். அப்போது முயலை வேட்டையாட அவர்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி தவறுதலாக கை பட்டு வெடித்துள்ளது. அந்த விபத்தில் சக்திவேல் படுகாயம் அடைந்து, மலை பகுதியிலேயே உயிர் இழந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தோனி மற்றும் செந்தில்குமார் அவரது உடலை அவரது வீட்டில் கொண்டு சேர்க்க முடிவெடுத்துள்ளனர்.

முயல் பிடிக்க சென்ற நபர்.. தவறுதலாக நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பரிதாப உயிரிழப்பு!

அதன் படி சக்திவேலின் உடலை பைக்கில் எடுத்துச் சென்று அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். வீட்டின் வெளியே வந்து சக்திவேலின் உடலை கண்ட உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செந்தில்குமார் மற்றும் தோனியுடன் காட்டுக்கு சென்ற போது, சக்திவேல் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.